×

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, டிச.4: காரைக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஞானம், தாலுகா தலைவர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா துவக்கி வைத்தார். மாநில செயலாளர் பொன்னுத்தாய்  பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சசிகலா, மாவட்ட பொருளாளர் பாக்கியலட்சுமி, நிர்வாகிகள் மாஸ்கோ, நந்தினி, மீனாள்,  தாலுகா துணை தலைவர் பேச்சியம்மாள், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி, மோகன், சிஐடியு தட்சிணாமூர்த்தி, வெங்கிட்டு, கணேசன், வெங்கடேஷ்வரன், குருந்தம்பட்டு ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mather Association ,
× RELATED ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி